
தச்சனின் கைகளால்
மரங்கள் இழைக்கப்பட்டிருந்தன...
இவர் சிறந்த தச்சரென்று
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்...
இழைக்கப்படாத மரங்கள்
எரிக்கப்படுகின்றன...
இழைக்கக் கூடாத மரங்களையும்
இழைத்தது தச்சுக்கூடம்...
கரியோத்தின் இராஜ்ஜிய ஆசை
சாத்தானின் வனத்தில் தழைத்தது...
பேதுருவின் மொழிகள்
சாத்தானின் வசனங்களாய் ஊறியது
அறிந்தவருக்குத் தெரிந்தது
அந்த ஒற்றைப் புன்னகைதான்...
சிலுவையில் அறைந்தவர்கள்
உண்மையைத்தான் எழுதினார்கள்...
இவர் யூதர்களின் ராஜா...
இதைத்தான் சொன்னது அந்த
டிசம்பர் 25
- மு.முகமது பாட்சா*
24 /12 /2018
No comments:
Post a Comment