Thursday, 20 December 2018

வாசிப்போம் கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி

இந்தக் கவிதையின் 
ஒரு முனையை நீயும் 
மறுமுனையை நானும் 
படித்துக்கொண்டே தொடர்கிறோம் 
இடை நிறுத்தல்கள் நில்லாமல் 
தொடர்கிறது கவிதை 
இலக்கணப் பிழையென்பதும் 
காதலர்களின் 
கவிதைகளில் அழகுதான் 
மழலைகளின் 
மொழியறியாதவர்கள் 
அங்கே 
மாய்ந்து கொண்டிருக்கட்டும்... 
சிறகுகளிருப்பதால் 
கவிதையோடு பறக்கிறோம் 
கற்பனைகள் குற்றமென்றால் 
கனவுகளை யார் சிதைப்பது? 
நிழல்களை யார்தான் தண்டிப்பது? 
கவிதைகளின் சந்திப்பில் 
நாம் வியந்து நிற்கும் போது... 
காலம் மட்டும்தான் கடந்திருக்கும் 
இந்தக் கவிதை 
நம்மை 
முழுமையாகவே வாசித்திருக்கும். 

- மு.முகமது பாட்சா*
21 /12 /2018

No comments:

Post a Comment

Popular Posts