
நிழல் என்னை வேவு பார்க்கிறது
கடந்தகால தினசரிக் குறிப்பொன்றில்
நான் இன்னமும்
கர்ப்பத்தைவிட்டு வெளியாகவில்லையென
கருவின் திசுக்கள்
எழுதி வைத்திருக்கின்றன...
என் நாபிக்கொடியின் ஒருமுனை
இன்னமும்
கர்ப்ப கிரகத்தில்தான் வாசம் செய்கிறது
முலைக்காம்பின் பற் தடங்களை
பாதுகாத்துவைத்திருப்பது
நாபிகிரகத்தின் துணைக்கோள்கள்தான்
நான் '(அ)ம்மா...' எனும்போது எழும் சிலிர்ப்பில்
அவ் அண்டத்தின் ஆதி
சற்றே ஆடியடங்கிப் பதறுகிறது.
- மு.முகமது பாட்சா*
29 /12 /2018
No comments:
Post a Comment