
எழுதாத பேனாவில்
என்ன இருக்கப்போகிறது?
கற்பனையை ஊற்றுகிறேன்...
அடையாள அட்டை வைத்துக்கொண்டு
அலைந்து கொண்டிருக்கிறது
என் சுயமரியாதை...
சிறகுகளைக் கொடுத்துத்தான்
வாக்குக் கேட்டார்கள்
வாக்களித்தபின் உதிர்ந்துபோனது...
பூட்டிய அறைக்குள்
நுழைந்திருப்பவன் திருடனல்ல
அரசாங்கம்....
அறுவடைக்குப் பின்தான் தெரிந்தது
விளைந்தது விளைச்சலல்ல
பெரும் கவலை....
எழுதாத கவிதையில்தான்
எத்துணைத் தவறுகள்
தாள் வெள்ளையாகவே இருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
28 /12 /2018
No comments:
Post a Comment