Wednesday, 5 December 2018

ஓவியனின் ஓவியன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஓவியனின் தூரிகையிலிருந்து 
மெல்ல 
வெளிப்பட்டுக்கொண்டிருந்தவன் 
தன்னை 
அதற்குள் நிரத்திக்கொண்டான். 

அவனின் விரல்கள் 
இப்போது தூரிகையைப் பிடித்து 
ஓவியனை வரையத் தொடங்கியது... 

ஓவியனின் 
இதயத்திற்குள் ஊடுருவும் ஓவியன் 
வண்ணங்களை வாரி 
தன்மீது இரைத்துக்கொள்கிறான்... 

விரல்களை முத்தமிட்டவன் 
சிறகுகளை ஏந்திக்கொண்டு 
விலாசத்தை வாங்கிக் கொண்டான் 

கூடங்களுக்குள் நுழைந்தவன் 
தன்னை விலைபேசிக் கொண்டிருப்பதை 
இந்தக்கவிதை விசுவாசம் என்கிறது. 

நீங்களோ 
விலையதிகம் என்கிறீர்கள். 

- மு.முகமது பாட்சா* 
05 /12 /2018 

No comments:

Post a Comment

Popular Posts