Thursday, 6 December 2018

வாசற்கதவுகள் இல்லை

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓலங்களும் 
ஒப்பாரிகளுக்கும் நடுவே 
அந்தக் குயிலின் குரல் 
தனியாகக் கேட்கிறது... 

வானம் வெளுத்துக்கிடந்தாலும் 
சூழல் கருத்திருக்க... 
கன்றொன்றின் அபயக்குரல் 
ஆதரவைத் தேடியதாக இருக்கலாம். 

ஒற்றைச்சுவரில் 
அசைந்தாடும் தன் மகனுக்கு 
மெழுவர்த்தியை எங்குத் தேடுவாள் 
கண்ணீர் மட்டும் காணிக்கை 

விழுந்த கிடந்த மரத்தில்தான் 
தொங்கிக் கொண்டிருக்கிறான் 
விவசாயி... 

வருகிறார்கள் போகிறார்கள் 
யார் வீட்டிலும் 
வாசற்கதவுகள் இல்லாமல் போனதால் 

ஆலயங்களின் கதவுகளெல்லாம் 
மூடப்பட்டிருக்கின்றன... 
துப்புரவு பணி 
இன்னமும் முடியவில்லை. 

நோய் பிடித்த தேசம் 
மருத்துவமனைகளின் வரிசையில்... 

கழுகுகள் வட்டமடிக்கின்றன 
அந்தக் குயிலின் குரல் 
இப்போது ஏன் கேட்கவில்லை? 

- மு.முகமது பாட்சா* 
06 /12 /2018 

No comments:

Post a Comment

Popular Posts