
காயல்மொழி வறண்டு கிடக்கிறது
உயிரெழுத்துப் போராட்டங்களில்
வல்லினம் மிகுவதாகச் சொல்வது அரசியல்
நிழலின் அழல் தகிப்பை
யார்தான் இங்கு உணர்கிறார்கள்?
கடலின் ஆதங்கத்தை அலையென்றும்
பெருமூச்சை
காற்றென்றும் கடந்து போகிறவர்கள் நாம்....
ஓடாத நதியில் உப்பளம் கட்டுகிறவன்
விளையாத பயிர்களுக்கா வியர்க்கப்போகிறான்?
வினையில்லாத எச்சங்களுக்கு
வினையெச்சமென்று பெயரிடாதீர்கள்...
பறப்பதெல்லாம் பறவையென்றால்
வௌவால்களை
பழம்தின்னியென்றேன் சொல்கிறோம்?
இனம் பிரிக்கத் தெரியாமல்
ஏமாந்துபோவதுதான் நமக்கு வாடிக்கை...
இல்லையென்றால்
வாக்களித்துவிட்டு புலம்புவோமா?
-மு.முகமது பாட்சா*
02 /12 /2018
No comments:
Post a Comment