Monday, 10 December 2018

முறையற்ற வாசல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சுயமற்றுப்போகிறது  சொற்புலம்புகள்
கனவின் வித்தாரம் கடலுக்குள் நுழைகிறது
மௌனத்தின் வாசம் மிளகாய் நெடி
காந்தாரம் பற்றியெரிவது மனசு
களவு போனவர்கள்
காட்சிப்பிழையில் மெல்லிய கோடாய்...
சிறகுகள் இருப்பதே
கால்கள் ஒடிந்தபிறகுதான் தெரிகிறது...
ஆசையின் இச்சைகளில் அலைக்கழிகிறது
ஒன்பது துவாரங்கள்...
முறையற்ற வாசலில்
மூங்கில்கள் பூத்து கிடக்க
எலிகள் தானியங்களை கொறிக்கின்றன...
மக்கிப் போன பிறகு
மனசையும் மண்ணென்றே சொல்கிறார்கள்
நிழலிருக்கும்வரை
ஓட்டங்கள் தொடர்கின்றன...
ஓய்வெடுக்கும்போது
யாரும் அருகில் இருப்பதில்லை...
காலம் என்றே கடக்கிறது கடிகாரத்தின் முட்கள்
காத்திருப்பென்பது
விழும் வரை வாழும் சுவர்தான்.

- மு.முகமது பாட்சா*
11 /12 /2018


No comments:

Post a Comment

Popular Posts