Wednesday, 26 December 2018

விதியின் வாய்ப்பாடு



புழுவாக இருந்த நான் 
சிறகுகள் முளைத்து 
சுற்றிலும் பறக்கத் தொடங்கினேன் 
பட்டாம்பூச்சியென்று 
மலர்கள் எனை கொஞ்சி மகிழ்ந்தன... 
உயரப் பறக்கும்போது 
நானுமொரு இராசாளியானேன் 
காற்றின் வேகம் கர்வத்தைச் சாய்த்து 
விழுந்து எழுந்தவன் மெல்ல நடக்க 
சிறகுகள் உதிர்ந்து மனிதனாகினேன்... 
வனங்களையழித்துக் கடலை வரைந்தேன்... 
ஆழியலைகள் என்னைச் சூழ 
நான் மீனாகி நீந்திக் களித்தேன்... 
ஆசைப்புழு தூண்டிலில் தவிக்க 
ஆர்வத்தில் இரையெடுத்து அகதியானேன்... 
புழுவாக ஜனித்த எனக்கு 
புழுவால்தான் 
மரணமென்பதும் விதியின் வாய்ப்பாடு. 

- மு.முகமது பாட்சா* 
26 /12 /2018 

No comments:

Post a Comment

Popular Posts