
இணையம்
என் முன்னாலமர்ந்து
என்னையே வாசித்துக் கொண்டிருக்கிறது...
விரல்களின் வழி
மரபணுவினை உறிஞ்சும் இலாவகத்தில்
என் மதியின் முடிச்சு நரம்புகள்
கீழே அறுந்து விழுகின்றன...
சாத்தானின் கிளை நாக்குகளில்
ஆசை விருட்சங்கள் உயிரூட்டம் பெற...
மேதாவி என்ற
சுய முத்திரை குத்திக் கொள்கிறேன்...
இராஜாங்கத்தின் ஒற்றர்கள்
எனது எழுத்துகளை
நாடு கடத்துகிறார்கள்...
நானிப்போது உறங்கும் அறையில்
நக நுணுக்குகளாய்
ஆயிரம் கண்கள் மேய்ந்து கொண்டிருக்க...
என் நிர்வாணத்தை
எவனோ சுகித்துக் கொண்டிருக்கிறான்...
நானென்பது நீங்களாகவும் மாறிவிட்டீர்கள்...
கூர்ந்து கவனியுங்கள்
துரோகிகளின் கண்கள் படர்வது
உங்களின் இணையத்திலும் தெரியும்.
- மு.முகமது பாட்சா*
26 /12 /2018
No comments:
Post a Comment