
யார் சொல்வது சரியென்பதுதான்
இப்போதுள்ள முக்கியப் பிரச்சனை...
அவர் சொல்லும் போது
அது சரியாகவேயிருக்கிறது....
இவர் சொல்லும் போது
இதுவும் சரியாகவேயிருக்கிறது...
சரியென்பதெல்லாம்
சரியானதல்ல என்றொரு பேச்சும் உண்டு
இங்கு எதுவுமே சரியில்லையென்ற
விரக்தியொன்று நடந்து போகிறது...
சரியாகத் தவறு செய்தால்
அஃதெப்படி சரியாகும் என்ற கேள்வி
எதிரில் வந்து உட்கார்ந்துகொள்ள
கேள்விகளே தவறென்று
சில நாற்காலிகள் முணங்குகின்றன..
இந்தக் கவிதை சரியா
அல்லது தவறா என்று தெரியவில்லை
ஆனாலும்
பிழைகள் இருக்கத்தான் செய்கிறது.
- மு.முகமது பாட்சா*
22 /12 /2018
No comments:
Post a Comment