
அந்த ஒன்றுக்காகத்தான்
எல்லோரும் அலைந்து கொண்டிருப்பதாக
அந்த சூஃபிக்கிழவன்
பிதற்றிக் கொண்டேயிருந்தான்..
எத்துணைத் தேடல்களிலும்
அந்தவொன்று மட்டும் கிடைப்பதேயில்லை
அந்தவொன்று
அத்துணை மகாப்பெரியதுமில்லை
அந்தவொன்றுக்காகத்தான்
எல்லோரும்
இங்கு அழுது கொண்டேயிருக்கிறார்கள்
அந்தவொன்று நிச்சயமாக
நீங்கள் நினைக்கும் அஃதில்லை
அந்தவொன்று
என்னவென்று அறியாமலேயே
எல்லோரும் கஃபனுக்குள் நுழைந்து
கல்லறைகளுக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள்
அந்தவொன்றை
யாராவது அறிந்துகொள்ளும்வரை
இந்த உலகம்
கபன் துணியால் பொதியப்பட்ட மையத்துதான்
என்று சொல்லிவிட்டழுதக் கிழவன்
அந்தவிடத்தை விட்டு கடந்து செல்கிறான்
- மு.முகமது பாட்சா*
07 /12 /2018
No comments:
Post a Comment