
எழுதாத கவிதைக்காக
எல்லோரும்
அலைந்து கொண்டிருந்தார்கள்
நானும் கூட
எழுதாத பேனாவுடன்
வெள்ளைத்தாளாய் அங்கிருக்கிறேன்
எழுத்துகளைச் சேகரித்தவன்
வார்த்தைகளில்
வழுக்கி விழுந்துகொண்டிருந்தான்
தேடியெடுத்த எழுத்துகளை
ஒருவன் எரித்துவிட்டு
இதுதான் அந்தக் கவிதையென்றான்
வராத அந்தக் கவிதைக்காக
வாசல் கதவை திறந்து வைத்தவன்
சன்னல்களை மூடிவிட்டான்...
கவிதைகளை
தடைசெய்யச் சொன்ன ஒருவன்
இதுவரை
எழுத்துகளைப் பொறுக்கவேயில்லை...
நான்
சேகரித்த வார்த்தைகளை
காகத்தின் எச்சம் கலைத்திருந்தது..
அங்கு முளைத்திருந்த மரத்தில்தான்
எத்துணை அணில்கள்...
எத்துணைப் பழங்கள்...
யாரும் எழுதாத கவிதை
இதுவாகக் கூட இருக்கலாம்.
- மு.முகமது பாட்சா*
05 /12 /2018
No comments:
Post a Comment