
எனக்கான மணித்துளிகளைச்
சேகரித்து வைத்திருக்கிறேன்.
அசைவு நாற்காலியின் ஆடலில்
அவை துளிர்த்தெழும்.
மழுங்கியப்பார்வையில் மணம் கமழும்,
'வாசனைக்கோர்த்து உரையாடும்.
கேட்காத செவிக்குள் நுழைந்து
சிருங்காரம் பேசும்,
தளர்ந்த நரம்புகளைத் தடவிக் கொடுக்கும்,
சுருக்கம் நீவி சுந்தர முத்தமிடும்,
அழகுறுத்தி ஒப்பனைச் செய்யும்,
பொறுமையுடன் என் மொழி கேட்கும்,
தலைகோதி தாலாட்டும்,
புறம்பேசா மென் பொழில் காட்டும்,
புத்துயிராய் என்னுடன் படுக்கும்...
பின் இறுதி மூச்சினை அவை இட்டு நிரப்பும்..
அதுவரை பத்திரமாக இருக்கட்டும்
பாதுகாக்கும் அம் மணித்துளிகள்!
- மு.முகமது பாட்சா*
23 /12 /2018
No comments:
Post a Comment