
வாழ்த்துகள் சொல்லும் போது
பல்லில் எதுவும்
சிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்...
ழகரம் கெட்டுவிட வாய்ப்புகளுண்டு
கைகளை
சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கியம்
அப்போதுதான்
விரல்களினிடையே பூக்கள் பூக்கும்
புன்னகையை மறந்துவிடக் கூடாது...
புள்ளினங்களின் வானம் அது...
நறுமணம் நல்லதுதான்
வார்த்தைகளில் சேர்ந்திருந்தால்
நட்பின் வாசலை அதுதான் திறக்கும்...
வாழ்த்துகள் நட்பினரே
வரவேற்போம் இனிய புத்தாண்டை.
-மு.முகமது பாட்சா
31 /12 /2018 to 01 /01 / 2019
No comments:
Post a Comment