
ஆளுக்கொரு
சொல்லாக எடுத்துக்கொண்டு
எல்லோரும்
எங்கெங்கோ விரைகிறார்கள்...
என்னிடமும்
ஒன்றிரண்டு சொற்கள்
பத்திரமாக இருக்கின்றன...
சொற்களை விற்று சிலர்
சொற்களை
வாங்கிக் கொண்டிருந்தார்கள்
சொற்களை எழுதிவைத்தவன்
விற்பதற்கு
புத்தகச் சந்தைகளை
தேடி ஓடிக்கொண்டிருந்தான்
பணத்தைப் பூட்டியவன்
சொற்களை
வாயில் குதப்பிக் கொண்டான்
சொற்கள் சிலவிடங்களில்
மிதிபட்டும் இறந்து கிடந்தது
சொற்களைச் சேகரித்த புத்தன்
ஆக்கிரமிப்புகளை
அதிகமாக்கி அரசனானான்
மேசையிலிருந்த சொற்களை
என் தேநீர்
அருந்திக் கொண்டிருக்க...
நான்
பூக்களில் இறந்து கிடந்தேன்.
என்னைச் சுற்றிலும்
சில சொற்கள்
இப்போது மொய்க்கத் தொடங்கின.
- மு.முகமது பாட்சா*
14 /12 /2018
No comments:
Post a Comment