
வெறித்தவிசாரத்தின் பிரபஞ்சகட்டையில்
உன்விரல்கள் மெல்ல இசைகின்றன...
சிரசிற்குள் நுழையும் அரூபக சங்கீதம்
தாளக்கட்டில் சுரம் பிரித்து நரம்புகளை மீட்டுகிறது
பாணச்சியின் பாடல் வரிகள்
பந்தயமெழுப்பி எழுத்துகளை இலாவகமாய்ப் பிரிக்க
என் எழுதுகோலின் முனையில்
ஒரு பிரபஞ்சயிருட்டு நாட்டியமாடுகிறது !
- மு.முகமது பாட்சா*
27 /12 /2018
No comments:
Post a Comment