
மூச்சிறைத்துப் பேசும் அக்கிழவனிடம்
என்ன பேசிவிடப் போகிறீர்கள்?
நீ ஆடிய ஆட்டத்திற்கு
அடங்கிவிட்டாய் என்றா?
அவனது படுக்கைப் புண்களின் ரணத்தை
பங்கீட்டுக் கொள்வதைப் பற்றியா?
அவன் துப்பியக் கோழையில்
இலக்கணப் பிழை என்ன இருக்கப்போகிறது?
அவன் கட்டிலின் கால்களுக்கு இருக்கும்
இரக்கம் கூட இல்லாதவர்கள்
அவன் மூச்சிறைப்பில் முகம் சுளிக்கிறீர்கள்
போய்த் தொலையட்டும் என்பது கூட
ஒரு வன்மக் கொலைதான்...
அவனது வாலிபம் இப்போது
உங்களிடம்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது
உணரும் நேரத்தில்
உங்களுடன் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும்.
- மு.முகமது பாட்சா*
31 /12 /2018
No comments:
Post a Comment