
நானொரு கவிஞனென்றேன்
ஏறக்குறைய கேவலமாகப் பார்த்தான்
எழுதிய நூல் இருக்கிறதா என்றான்
எடுத்துப்போட்டேன்
புரியவில்லையென்றவன்
நீயென்ன புத்தகப்புழுவா
பக்கங்கள் அரித்திருக்கிறதென்று
நக்கலடித்தான்....
சிரிப்புவரவில்லை கோபமும் கூடத்தான்
இதுவெல்லாம் கவிதையா?
என்று விசிறியடித்தவன்
பார்க்கத் தவறிவிட்டான்
அஃதென்
மீசை பாரதியின் கவிதைகளென்று!
- மு.முகமது பாட்சா*
11 /12 /2018
No comments:
Post a Comment