
நீர் சூழண்டம்
நிலையெனவே நான் நினைந்திருப்பேன்...
விழியசைவில்
பேரண்டம் இதுவெனவே வியந்திருப்பேன்
கை கால் அசைவுகளை
கருணையென மகிழ்ந்திருப்பேன்
கற்பனையில் அங்கும் நான்
சில கவிதைகள் எழுதியிருப்பேன்...
பந்தகச் சூழொன்றும் நான் காண்கிலேன்
பகட்டு வஞ்சமொன்றும் சூழ்ந்திலேன்
சுற்றும் நாபிக்கொடி
நிலையெனவே நான் நீந்தியிருப்பேன்...
இத்துணையும்
ஈரைந்து வாசமென்றே அறிந்திலேன்
பெற்றவளென்னை
இப் பெருவெளிதன்னில் கீழிறக்கும் வரை...
- மு.முகமது பாட்சா*
02 /01 /2019
No comments:
Post a Comment