
இப்போதெல்லாம்
நான்
காந்தியை அடிக்கடி பார்க்கிறேன்...
சற்றுமுன் கூட என்னெதிரில்
நின்று பேசிக் கொண்டிருந்தார்...
அங்கிருந்து நகர்ந்தவுடன்
இஸ்மயில் என்று பச்சை குத்திக்கொண்ட
கோட்சே போவதைப் பார்த்தேன்...
ஓய்வு பெற்ற நடிகர்
காந்தியாக மாறிக்கொண்டிருந்ததையும்
அங்கே
அகிம்சை காற்று வீசிக்கொண்டிருப்பதையும்
பார்க்க முடிகிறது...
கோட்சேக்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட
மேக் இன் இந்தியா காந்திகள்
தங்கள் கைகளை அகல விரித்து
தேசத்திற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்...
அரசியல்வாதிகளின் கைகளில்
எப்போதும் பார்க்கமுடிகிறது
சத்தியசோதனை புத்தகம்.
- மு.முகமது பாட்சா*
30 /01 /2019
No comments:
Post a Comment