Thursday, 31 January 2019

கந்தலாடைச் சுவனம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்

தைலத்தைத் தடவிக்கொண்டு 
அத்தர் மணக்கிறாய்.... 
அல்லாஹ்வின் வாசலில் அமர்ந்து 
ஆயத்துகள் ஓதுகிறாய்... 
தொப்பியும் குர்தாவும் கூட 
சுத்தமாய் இருக்கிறது.... 
தஸ்பிகள் விரலில் சினேகித்து 
நகர்ந்து கொண்டே இருக்கின்றன... 
ஊருக்களித்த உன் விருந்து 
வியப்பில் ருசிக்கிறது.... 
ஆனாலும் நீ தள்ளி வைத்த சுவனம் 
உனக்காகப் பிரார்த்திக்கிறது 
அம்மா என்ற கந்தலாடை. 

- மு.முகமது பாட்சா* 
01 /02 /2019 

No comments:

Post a Comment

Popular Posts