
அவள்
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
நம்பமுடியவில்லை
நேற்று என்னிடம்
நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாள்...
அடிக்கடி அழுதாள்
காயங்களைக் காட்டினால்...
சிரிக்க முயன்று தோற்றுப்போனாள்...
இப்போதும் ஏதோ சொல்வதுபோல்
இதழ்களை
குவித்து வைத்திருக்கிறாள்....
பூக்கள் அவள் மீது
நிறைத்துக் கொண்டிருந்தன...
வாசனை துர் நாற்றம் வீசியது...
புதைந்து கொண்டிருந்தவள்
மாய்ந்தழுகிறாள்....
என் கையில் அவள் தந்த கவிதை
மெல்ல
முளைவிட்டு எழுந்து கொண்டிருக்க
நான் மரமாக
நகர்ந்து சென்று கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
23 /01 /2019
No comments:
Post a Comment