
இரவிடம்
என்ன சொல்லிப் புலம்பினாய்?
நிலவு அழுகிறது
அதன் கண்ணீர்த் துளிகள்
வானமெங்கும் சிதறியிருக்கின்றன....
காற்று நகரமறுத்து
மரங்கள் செயலற்று நிற்கின்றன...
வானம் அழுதுவிட்டால்
உன் புலம்பல் நின்றுவிடுமா?
மேகத்தைத் தேடி
என் பாடலொன்று அலைகிறது...
கூதையிலும் கண்ணீர்விடும்
புற்களை நான் எப்படித்தேற்றுவது?
இரவிடம்
என்ன சொல்லிப் புலம்பினாய்?
இதயமற்ற கதவுகள்
எப்போதும் திறந்திருப்பதில்லை...
இல்லையென்பது
வானத்தில் இருப்பதேயில்லை...
வெளிச்சம் வரும்போது
விளக்கு இருட்டாகத்தான் இருக்கும்....
இரவிடம்
என்ன சொல்லிப் புலம்பினாய்?
நிலவு அழுகிறது
அதன் கண்ணீர்த் துளிகள்
வானமெங்கும் சிதறியிருக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
27 /01 /2019
No comments:
Post a Comment