
கொஞ்சமாய் குடித்துவிட்டுத் தள்ளாடியவன்
நிதானமாய் இருப்பதாக சொல்லிக் கொண்டான்.
அவன் மேசை
நிதானமிழந்து மிக்சரை இறைத்திருந்தது...
கோப்பைத் தடுமாறாமல் பார்த்துக்கொண்டான்...
பாதியளவு மது
அவனைப்பார்த்துச் சிரித்தது...
மச்சான் சிரிக்குறா பாருடா! என்றவன்
அவளை அப்படியே குடித்தான்...ங்கொம்மா எங்கிட்டேயவா?
குழறியவன் நான் டீஸண்ட்டு மச்சான் என்றான்...
கோப்பை விழுந்து சிதறியது
ஆன்ட்ராய்டில் ' நீ எங்கடா இருக்க?'
அம்மா பதறிக் கொண்டிருக்க....
வாயைத் துடைத்துக் கையில் ஊதிப் பார்த்தவன்
எழுந்து நின்று தெளிவாகச் சொன்னான்...
பிரண்டு வீட்டில படிக்கிறேம்மா... காலைல வந்திடறேன்.
- மு.முகமது பாட்சா*
09 /01 /2019
No comments:
Post a Comment