
17 நாட்கள் 820 விற்பனை அரங்குகள் 18 கோடி விற்பனை
எனக் களைக்கட்டி முடிந்திருக்கிறது சென்னை 42 வது
மாபெரும் புத்தகத் திருவிழா!
இப்போதெல்லாம் வசதியானவர்களின் வசந்த
பொழுது போக்கு அரங்குகளாக மாறிவருகிறதா இது போன்ற
அரங்குகள் என்பது சாமானியர்களின் கேள்வி என்பதை மட்டும்
ஒதுக்கிவிட்டு நகர்ந்துவிடாதீர்கள்
எந்த விழா மேடைக்குச் சென்றாலும் பெயர் அளவிற்காவது
சலுகைகளை அறிவிக்கும் நம் முதல்வர் கண்காட்சியைத்
திறந்துவைத்துவிட்டு பேசும் போது ஆண்டுக்கு 20 ஆயிரம்
பக்கங்களாவது படிக்கவேண்டும் என்று சொன்னவர்
நூலகங்களை மேம்படுத்துவது பற்றியோ, நூலகங்களுக்கான
புத்தகங்களை வாங்குவதற்கான தளர்வினை பற்றியோ
எதையுமே பேசாததைப் பற்றி அங்குக் கேள்வி எழுப்பாதது
என்ன மேதாவித்தனம்?
புத்தத்திருவிழா வின் ஆரம்பத்திலிருந்து கவிஞர் மனுஷ்யபுத்ரன்
உற்சாகமாக இருந்தார் என்றே சொல்லவேண்டும். முடிந்தவரை
அங்கு அவர் தன் வாசகர்களோடுவே உலாவிக் கொண்டிருந்தார்.
நான் சென்றிருந்தபோது சாரு அவர்களுடன் மிகச் சுவாரசியமாகப்
பேசிக் கொண்டிருந்தார்.
நான் 11ம் தேதி அங்குச் சென்றபோது அங்குச் சில ஏமாற்றங்கள்
நிச்சயம் காத்திருந்தன. கூட்டம் அவ்வளவாக இல்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை. மேலும் வாகனங்கள் மைதானத்தின்
முன் வாசலில் நிறுத்தப்படுவதால் வயதானவர்கள் சுமார் 2 கிமீ
உள்ளே நடந்துவரக் கஷ்டப்பட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஒரு சில அரங்குகளைத்தவிரப் பெரும்பான்மையான அரங்குகளில்
கவுண்டரில் உட்கார்ந்திருந்த ஊழியர்கள் தங்களது கைப்பேசிகளை
நோண்டிக் கொண்டிருந்தார்களே தவிர , வாசகர்களைப்
பெயரளவிற்குக் கூட வாங்க என்று சொல்லி அழைக்கவில்லை
என்பது அவர்களுக்குச் சாதாரண விசயமே! அப்படியும் உள்ளே
நுழைந்த வாசகர்கள் முதலில் பார்த்தது விலை என்பதும்
பிறகுதான் தலைப்பு என்பதும் அதிர்ச்சியான உண்மை.
பாக்கெட்டை அடிக்கடி தொட்டு பார்த்துக் கொள்வது
மிக அவசியமாகிறது.
தேசாந்திரி பதிப்பகத்தில் சஞ்சாரம் நூல்கள் அதிக அளவில்
அடுக்கி வைத்திருந்தார்கள்... எஸ்ரா அவர்கள் வாசகர்களோடு
உரையாடிக் கொண்டிருந்தார்...
உயிர்மையில் சில புத்தகங்களை வாங்கினேன்... எப்போதும்
அவர்களின் விலைப்பட்டியல் அவர்களின் பையின் உள்ளிருக்கும்.
இந்தத் தடவை அது மிஸ்ஸிங். பெரும்பான்மையான பதிப்பகங்களிலும்
இப்படிதான் நடந்தது. நிவேதிதா பதிப்பகம் இன்றும் அப்படியே மாறாமல்
புன்னகையுடன் அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஐயா
கழுகு இராமலிங்கம் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்தேன்.
ரஹ்மத் பதிப்பக அரங்கு அவர்களின் பதிப்பக நூல்கள் மட்டுமில்லாமல்,
மற்ற அரங்குகளின் நூல்களையும் விற்கிறார்கள்...
அங்கு விற்பனையும் சிறப்பாகப் பார்க்க முடிந்தது... காரணம்
கவிஞர் உஸ்மான் அவர்களின் அசராத உழைப்பும் பாட்சாவின்
சளைக்காத உற்சாகமும் என்று கூடச் சொல்லலாம்.
வெளிமேடையில் நாஞ்சில் நாடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்...
வாசிப்பின் தேவை பற்றி மிகச் சிறப்பான உரை என்று
நிச்சயம் சொல்லலாம். புத்தகங்களின் விலைப்பற்றியும்
கொஞ்சம் பேசியிருக்கலாம் ஆசானே!
4௦௦௦ ரூபாய்க்கான புத்தகங்களை நானும் மகனும் வாங்கினோம்...
பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது
படித்து முடித்தபிறகுதான் தெரியும் நண்பர்களே!
- முகமது பாட்சா
21 /01 /2019
No comments:
Post a Comment