
துப்பாக்கியை
அடிக்கடி துடைத்துக் கொள்கிறான்...
நடுக்கம் வரமாலிருக்கச்
சற்று மது அருந்தியிருக்கலாம்
ஆனாலும் கை நடுங்கத்தான் செய்கிறது...
குறிதவறாமல் சுடுவதைப் பற்றிச்
சற்றுமுன்தான் படித்திருந்தான்....
ட்ரிக்கரை அழுத்தியவுடன் குறிதவறி
அவனின் தன்மானத்தைச் சாய்த்தது...
சற்று நேரம் அழுதுகொண்டிருந்தான்
மீண்டும் ட்ரிக்கரை அழுத்தியவன்
விழுந்துகிடந்த தன் கோபத்தைச்
சிறிது நேரம் வெறித்தான்...
இப்போது தன் நெற்றிப்பொட்டில் வைத்து
அழுத்துகிறான்
விசை உந்துவதற்குக் குண்டுகள் இல்லை...
துப்பாக்கியை வீசி எறிந்தவன்
நடந்துபோகும் பாதையில்...
வெறிபிடித்த
நாயொன்று இறந்து கிடந்தது.
- மு.முகமது பாட்சா*
31 /01 /2019
No comments:
Post a Comment