
பெரும் காமம்
ஓரறைக்குள் உறங்கிக்கொண்டிருக்க,
விதர்ப்பன்
ஒப்பனைப் பூசி நடம்புரிகிறான்...
ஆர்த்தன் அலைக் கழிய
வியர்க்கும் தளம் வீரிட்டெழுகிறது...
சுடரகன்ற இருட்டில்
பெருந்தீ ஆழிக்குள் நுழைந்தகன்று
ஆர்ப்பரிக்க
எரிந்தவனின் எலும்புக்கூட்டில்
ஒட்டியிருக்கிறது
தனமும் யோனியும் சகடையாய்.
- மு.முகமது பாட்சா*
29 /01 ./2019
No comments:
Post a Comment