Thursday, 24 January 2019

பெருந்துகள்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மரம் மற்றும் வெளிப்புறம்

அந்தச் சமாதியை 
எளிதில் உடைத்துவிடாதீர்கள்... 
அதனுள் ஒரு கடலும் 
ஒரு வானமும் இருக்கிறது... 
ஆடம்பர மாளிகையின் பொக்கிஷங்கள் 
அதனுள் கொட்டிகிடக்கின்றன... 
ஒரு பறவை இன்னமும் 
அங்கேயே பறந்து கொண்டிருக்கிறது... 
ஒட்டகங்களின் மூச்சிறைப்பை 
இன்னமும் கேட்கலாம்.... 
விளக்கிலிருந்து வெளிவந்த பூதமொன்று 
ஆலம்பனாவின் உத்தரவிற்காக 
அங்கேயே காத்துகிடக்கின்றது... 
சமாதியை உடைத்துவிடாதீர்கள்... 
அந்த எலும்புகளில் ஒட்டியிருப்பது 
பேரண்டத்தின் பெருந்துகள்கள். 

- மு.முகமது பட்சா* 
25 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts