
ஒரு
சொல்லெடுத்து நட்டுவைக்க
அஃது ஊற்றாகி
வானம் நிறைத்து மழையாகிறது....
குளங்கள் நிறைந்து வழிய
ஆற்றின் படுகை
தாகமாய் வேகம் பருகுகின்றன....
நீரின்
கனம் தாளாது நிலம் அதிர்கிறது....
வேரின்
முனைத்தேடி பயணிக்கும் நான்
அச் சொல்லின் கைகளில்
சிக்கித் திணறுகிறேன்.....
நிழலென்னை விட்டுப்பிரிய
மழை மெல்லெனக் குறைகிறது...
நான் மட்டும் தனியனாய்
அச்சொல்லோடு வாழ்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
22 /01 /2019
No comments:
Post a Comment