Thursday, 3 January 2019

வாசிக்காத கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் செடி

அந்தப் புத்தகத்தின் கதையை 
யாரும் வாசித்திருக்க மாட்டார்கள்... 
அஃதொரு இருட்டுப் பிரபஞ்சத்தில் 
எழுதப்பட்ட கதை 
கால்கள் மேவாத கானகச் சுவனத்தில் 
கைகள் விரித்துப் பறந்த கதை 
தூரிகையெடுத்து எழுதாத வரிகளோடு 
கவிதைகள் அரங்கேற்றிய கதை 
வாசிப்பே சுவாசிப்பாகி சுவனம் 
சுவனத்தையே பிரசவித்த கதை.... 
ஆழம் தேடியலைந்து உப்புக்காற்றில் 
உலர்ந்துபோன கதை.... 
அஃதொரு அழகான கதைதான்... 
வாசிப்பிற்கு விட்டால் 
அதன் வாசம் குறைந்துவிடலாம்... 
ஆனாலும் அது 
நாற்காலியில் அமர்ந்து 
தன்னையே ரசித்துக் கொண்டிருக்கிறது 
இருட்டான இதயம் 
இப்போது வெளிச்சமாக இருக்கிறதாம்.

- மு.முகமது பாட்சா* 
04 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts