
உதிரத்தின்
செவ்வண்ணம் விழுங்கிப் பறக்கும்
தேசியக்கொடிக்குள்
வர்ணங்களும் சாதிகளும் ஒளிந்திருக்குமா?
வெண்மையைத் திருடிக் கொண்டவர்கள்
கொடியின் கயிற்றை உயரே எழுப்புகிறார்கள்...
மதக்கலவரங்களில்
கொடிகட்டிப் பறக்கிறது எங்கள் தேசியம்...
ஆதாரத்தை உண்டுவாழும் அரசியல்வாதிகள்
தடாகத்தை அழுக்காக்கி விட்டார்கள்...
மீன்கள் செத்து மிதக்கின்றன....
பசுமை வண்ணம் படர் நிறமாக மாறிவிட்டது...
உயரத்திலிருந்து உரையாற்றுகிறார்
தேசத்தின் தலைவர்...
இன்னமும் கீழேயேதான் நிற்கிறோம்
சல்யூட் அடித்துக் கொண்டு...
வாழ்க நம் பாரதம்.
- மு.முகமது பாட்சா*
26 /01 /2019
No comments:
Post a Comment