
நாட்குறிப்பின் நாலாவது பக்கம்
திகதி நான்கு
நான் உன்னைச் சந்தித்ததைச் சொல்கிறது
அதன் பிறகானத் திகதிகளில்
உன் நிழல்கூட விழவேயில்லை....
எப்படியிருக்கிறாய் என்ற விசாரிப்பை
நேற்றுதான் உன்னிடம் நிகழ்த்தினேன்
சந்தைச்சாலைக்கு
நம்மைப் பற்றிக் கவலையில்லை...
நீ நகைப்பின் மொழியில் நவின்றதை
விளங்காமல் தவிக்கிறேன்...
நலமா? நலமில்லையா?
நீ நன்றாகத்தானே இருக்கிறாய் என்ற
அந்தச் சொல்லில்
நானும் நாட்குறிப்பும்
காலியான பக்கங்களாக இருந்ததை உணர்கிறேன்
இன்று திகதி நான்கு.
- மு.முகமது பாட்சா*
05 /01 /2019
No comments:
Post a Comment