Sunday, 27 January 2019

அநாதியான புத்தகம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தப் புத்தகம்
அச்சடிக்கப்பட்ட பிறகுதான்
அநாதியாகக் கிடந்தது...
அதன் வார்த்தைகள்
வாசகர்களை தேடிக் கொண்டிருக்க
வெளியே 
கத்தரிக்காய் விற்பவன்
காசுக்குத்தான் கருவேப்பிலையென்று
சொல்லிவிட்டான்...
அந்தப் புத்தகம்
அச்சடிக்கப்பட்ட பிறகுதான்
அநாதியாகக் கிடந்தது.

- முகமது பாட்சா*
28 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts