Thursday, 17 January 2019

ஒப்பனை தூரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஏதாவதொரு வார்த்தை 
நெசவு செய்துகொண்டே இருக்கிறது 
பார்வைகளை 
ஏதாவதொன்று தாக்கிவிட்டுப் பறக்கிறது 
கால்களை மறந்து நடக்கிறேன்... 
நிழலொற்றனை கவனிப்பதேயில்லை... 
பல் துலக்கும்போதே 
ஒப்பனைகள் துவங்கி விடுகின்றன... 
அசமந்தமாய்ச் சிரிக்கக் கற்றுக் கொள்கிறேன் 
வார்த்தைகளைக் கழுவினால் 
நிச்சயம் சாயம் மங்கிவிடும்.... 
வாசனைகளை நம்பிவிடாதீர்கள்... 
ஓட்டைகளின் அளவைப் பெரிதாக்கினால் 
ஒன்பது துவாரங்களும் நாறிவிடும்... 
புத்தவிகாரத்தின் கீழ் 
புத்தன் என்றும் உட்கார்ந்ததில்லை 
என்பது மட்டுமே உண்மை. 

- மு.முகமது பாட்சா*
18 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts