
அகழும்போதுதான் அவை
அடுக்கடுக்காய்க் கிடைத்தன...
நிலவறைக்குள் எப்படி
குவியல்களாய் எலும்புகள்?
விலா எலும்புகளில்
எண்ணிக்கை குறைகிறதாம்...
இடுகாடு என்பதற்கு எந்தவொரு
அத்தாட்சியும் அங்கில்லை...
அகழும்போது
துப்பாக்கிகளின் ஓசை கேட்டதாக
தோண்டுபவன் சொல்கிறான்...
குழந்தைகளின் அழுகுரல்
இப்போதும் கேட்கிறது...
முலையிழந்த பெண்
யோனியின் உதிரத்தோடு ஓடியதாக
ஒருவன் புலம்புகிறான்...
இனப் படுகொலையின் சாட்சியென
பட்சியொன்று
சொல்லிவிட்டுப் பறக்கிறது....
ஆய்வு கார்பன் 14 க்கு பிறகு
கிமு வின் அராஜகம் என எழுத
வெள்ளைத்தாள் தயாராகிறது
தேவை
தமிழனின் இரத்தம் மட்டுமே!
- மு.முகமது பாட்சா*
20 /01 /2019
No comments:
Post a Comment