Monday, 28 January 2019

இதுவும் நாடோடி பாட்டுதான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இரவு

கனவுவெளியை மதபோதகர் 
சுவனத்திற்கும் நரகத்திற்குமாக 
நகற்றிக் கொண்டிருக்கிறார்.... 

புல்லாங்குழல் இசைப்பவனை 
லயம் கடத்திச் செல்கிறது... 

தூண்டிலில் மாட்டிவிட்டது இரை... 
மாட்டிக்கொண்டது ஆசை... 

மௌனம் 
பெரும் சப்தகூட்டின் அந்தகாரம்.... 

நிழலோடு நடக்கும் வரைதான் 
மனிதன் உயிரோடிருக்கிறான்... 

அழுகையை ஆராதிக்கத் தெரிந்தவன் 
இரக்கத்தை இதயத்தில் வைத்திருக்கிறான்... 

கண்ணாடி காட்ட மறந்த முகம் 
காதலுக்குத் தெரியாது.... 

வஞ்சகத்தின் சிரிப்பும் 
வாசனையாகத்தான் மணக்கும்... 

வழிப்போக்கன் கால்கள் மட்டுமே 
திசைகளை என்றும் தேடுவதில்லை... 

இதுவுமொரு நாடோடி பாட்டுதான் 
நாளைக்குள் மறந்துவிடலாம்.

- மு.முகமது பாட்சா*
28 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts