
கனவின் வரியொன்றை
இதயத்தில் வைத்திருக்கிறேன்...
விழிகளில் தடவி
கவிதையாக வாசிக்கிறாய்!
ஒளியாண்டுகளுக்குள் ஊடுருவுகிறது
உன் புன்னகை...
நடையிலக்கணம் தேவையென்று
இடை கவிதை மொழிகிறது...
கூந்தலை அலைய விடாதே
வார்த்தைகள் சிதறிப்போகின்றன...
நிழல்மொழிதான் காதலென்று
இடைவெளி இட்டு நிரப்புகிறது...
மொழியாத வார்த்தைகளுக்குள்
பதியமிட்டிருக்கும் ரோசா செடிகளை
பத்திரமாகப் பாதுகாப்போம்
பட்டாம் பூச்சிகளின் தேடல்
மொட்டுகள் மலர்வதற்காகத்தான்.
- மு.முகமது பாட்சா*
27 /01 /2019
No comments:
Post a Comment