
விரிந்திருக்கும் வானம்
நிறைந்திருந்தாலென்ன?
எத்துணை நிலவை என்
கொட்டடிக்குள் வைக்க முடியும்?
பரந்திருக்கும் கடலை
பருகிடத்தான் பயனுண்டோ?
அடர்ந்திருக்கும் வனத்தில்
தங்கிடத்தான்
அனுமதியும் இல்லையடா....
முகிழ்ந்திருக்கும் நகையைப் பூட்டி
நெளியும்வாய் என்ன வாய்?
நெஞ்சுருகிப் பேசுவதால்
வஞ்சகங்கள் கரைந்திடுமா?
என்புருக்கி வீழும் நாளில்
கைவிரித்து வேண்டுவதால்...
துன்புற்றல் போய்விடுமா
தூய நெஞ்சை விற்ற பஞ்சே?
-மு.முகமது பாட்சா*
24 /01 /2019
No comments:
Post a Comment