
கரைத் தவழ்ந்து திரும்பிச்செல்லும்
அந்தக் கவிதைக்கு
அற்களம் என்று பெயரிட்டார்கள்...
சிப்பிகளும் சங்குகளும்
சித்திரவெழுத்தில் எழுதப்பட்டிருந்தன...
கவிதையோடு
நண்டுகள் ஓடி விளையாட....
கடலின் ஆழ்மனதை
அந்தக் கவிதை
எழுதிக் கொண்டேயிருக்கிறது...
சோக வரிகளில்
கால் நனைத்தவர்கள் குதூகலிக்க...
பிரபஞ்ச இருட்டை
மறைத்து வைக்கிறது கவிதை....
மொழியறியாதவர்களின்
வாசிப்பில் கவிதை நுரைக்க....
கவிதையை
சரியாக வாசித்தவன்
மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான்...
கட்டுமரம் காற்றை விழுங்கி
முதுகில் பயணம் செய்ய...
பௌர்ணமி நிலவு
கடலை வாசித்துக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
08 /01 /2019
No comments:
Post a Comment