Monday, 17 September 2018

பூதம்

தானியங்கு மாற்று உரை இல்லை.


குடுவைக்குள்ளிருக்கும் பூதம் 
எப்போது வெளிவருமென்று தெரியவில்லை 
இரண்டு யெவனியர்கள் காவல் காக்கிறார்கள்... 
சித்திரம் தீட்டியவன் 
சிலுவையில் அறையப்பட்டிருந்தான்.... 
குயவனின் தலை 
ஜாடியின் மூடியாக அழுத்தப்பட்டிருந்தது... 
பார்வையாளர்கள் 
தொலைந்து கொண்டேயிருந்தார்கள்... 
புகை வரும்போதெல்லாம் 
பூதம் ஏமாற்றிக் கொண்டேயிருந்தது... 


அலாவூதீனின் விளக்கில் 
பூதம் வெளிவந்து ஆச்சரியம் கூட்டியது 
ஆலம்பனாவாக மாறிப்போனவன் 
அழகிகளை மட்டுமே தேடிக் கொண்டிருந்தான் 
லைலா மட்டும் 
சிந்துபாத்திடம் பதுங்கிக் கொண்டாள்... 


அலிபாபா தேடிவந்த குகை 
காலியாகவே இருந்தது 
காசீம்கானை மட்டும் காணவில்லை 
40 திருடர்களும் 
கழுதைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் 


ஷஹரஜாத் கதை சொல்லி முடிக்கும் போது 
சுல்தான் 
ஷாகிரயரின் தலை கீழே உருண்டு கிடந்தது 


மக்களுக்கான திட்டங்களை 
மேடையில் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தபோது 
சிறையின் கதவுடைத்த செவ்வெரும்புகள் 
ஊர்வலம் வந்து கொண்டிருந்தன. 

- மு.முகமது பாட்சா*
17/09/2018

No comments:

Post a Comment

Popular Posts