
வயதான கிராமத்திற்குள்
இளைஞனாக உள் நுழைகிறேன்...
என்னைச் சுற்றிலும்
விளையாட்டுகள் சூழ்ந்திருக்கிறது
அலட்சியமாய் குளித்த குளம்
அலைகிறது நீரலையில் அழகாக
அத்தை மடியின் ஆகாசம்
மாமன் தந்த மரப்பாச்சிகள் எல்லாம்
உயிர் பெற்று சூழ்கின்றன
நிலாச்சோறு அதன் மேல் கிள்ளிய ஊறுகாய்
நாக்கிலொட்டிய சுவை...
தாயக்கட்டை அண்ணன்களின்
தகாத சகவாசங்கள்....
வெட்கப்படும் வெள்ளி மயில்...
இரசமிழந்த கண்ணாடி
என்னைப் பழுப்பாய் காட்டுகிறது...
நகரத்தின் எச்சில்
முதியோர் இல்லத்தின் குப்பைக்கூடை....
பழுத்த இலைகளை
கூட்டி அள்ளிக் கொண்டிருந்தார்கள்...
நான் மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
01/10/2018
No comments:
Post a Comment