
நியாயங்களைக் கொன்று
ஆளுமையாகும்
சில எதிர்-எதிர் வினைகள்!
புத்தரின் கைகளில் காட்சியாகும்
கொலை ஆயுதங்கள்!
பிழைகளை,
நியாயங்களாய் மாற்றிக் காட்டும்
இரசவாதக் கண்ணாடிகள்!
மதங்களில் ஊடுருவி
நெளிந்து வெளியேறும்
நாற்றப்புழுக்கள்!
காயங்களை, கிளறி, நோண்டி
கற்பூரம் கொளுத்தி வைக்கும்
காட்சிப்பிழைகள்!
அரசியல் புணர்வில் வழியும்
வியர்வைத் துளிகள்!
விளம்பரம் தேடியோடும்
நரகல் கூளங்கள்!
எதிர் வினைகளைச் சாகடிக்கும்
எதிரெதிர் வினைகள்!
- மு.முகமதுபாட்சா*
05/09/2015
No comments:
Post a Comment