
அந்தக் காகம்
அப்படித்தான் ஒவ்வொன்றாகச் சேர்த்தது,
அதன் கூடு மிக அழகானது...
என் கனவுகள் போல்
முட்டைகள் அடைகாத்துக் கொண்டிருக்கின்றன,
வெப்பம் உயிர்ப்புடன் சுவாசிக்கிறது,
காகம்
என்னைப்போல் அசட்டையாக இருப்பதில்லை,
அது தன் கனவுகளை
பத்திரமாக வைத்திருக்கிறது,
கால்களின் நகங்களைக் கூர் தீட்டியிருக்கிறது,
இறகுகளின் சுவர்கள்
உறுதியாகவே இருக்கின்றன,
இரண்டொரு நாட்களில் அதன் கனவுகள்
சப்தமெழுப்பக்கூடும்...
என் கனவுகளில்
இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறேன்...
படுக்கையறையின் திரைச்சீலை
வெளிச்சத்தைத் தடுத்திருக்கிறது...
- மு.முகமது பாட்சா*
10 /07 /2018
No comments:
Post a Comment