
உத்திரத்தில் தொங்கும் புடவைக்கும்
ஒரு நூறு கதையிருக்கும்
இதயம் திறக்காத பெட்டகத்தில்
பாம்புகளின் படுக்கையிருக்கலாம்
காட்சியால் வருவதெல்லாம்
காதலென்றாவதில்லை
மோகத்தின் வாசம் காமத்தின் பசி
காதல் கண்மூடித் திறக்கும் தவம்
வண்டையுண்ணும் மலர்கள்
வாசலை அழகாகவே திறந்திருக்கும்
இறக்கிவைத்த பிணத்தில்
இதயம்தான் முதலில் இறந்து கிடந்தது
காமத்தின் கழிவறையாய்
யோனி பிசுபிசுக்க
கடைசியாய் அவளெழுதிய கடிதம்
அவள் காதலை காறித்துப்பியது
- மு.முகமது பாட்சா*
07 /07 /2018
No comments:
Post a Comment