Tuesday, 24 July 2018

கிழித்தான்



அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

வாசலை இடித்துவிட்டுச் சுவரெழுப்பினான் 
சன்னல் திரைகளைக் கனமாகப் போட்டான் 
தொட்டில் மீன்களைத் தரையில் விட்டு இரசித்தான் 

அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

காடுகளை வெட்டி சாலை போட்டவன் 
கால்வாய்களை வெட்ட மறந்தான் 
வெள்ளம் ஊருக்குள் நுழைந்து உணவருந்தியது 

அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

ஆதாரில் இருப்பது தானில்லையென்றான் 
தனது நாடும் இவ்வுலகில் இல்லையென்றான் 
குழிக்குள் விழுந்தவன் எழுந்திருக்க மாட்டாமல் 

அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் 

- மு.முகமது பாட்சா*
24 /07 /2018

No comments:

Post a Comment

Popular Posts