கருப்புப் பூனை

கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டது
- 'க்ரோ.. நான் அழகாக இருக்கிறேன் இல்லையா!'
என்று வியந்தது
க்ரோ தலையைச் சாய்த்துப் பார்த்து
- ;ஆம் மன்னா!'- ' என்றது...
ப்ளாக்கன் என்ற அந்தக் கருப்பன் பூனை
மீசையைத் தடவிக் கொண்டான்...
நீ என்னைக் கடவுள் என்று கூட அழைக்கலாம்'
க்ரோ பணிவாகத் தலையையாட்டி
- 'அப்படியே காட்' என்றதும்
- 'நான் என்னை ஏன்
கடவுளென்று சொல்லிக் கொண்டேன் தெரியுமா?'
- 'சொல்லுங்கள் காட்'
- 'என் நிழல் கூட என் நிறம்தான்'
என்று சிரித்த போது
- 'என் நிழல் மட்டுமென்ன
சிகப்பாகவா தெரியும்?' என்று கேட்க நினைத்தாலும்
- 'ஆம் அதிசயம்தான் காட்' என்றது...
அப்போது அந்தப் பக்கம் நகர்ந்த மௌஸ்
சிரிக்க...
கடுப்பானான் கருப்பன்
- 'என்ன தைரியம்! என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்?'
- 'நான்தான் உன் கடவுள்
உன்னை ஓடஓட வேலை வாங்குவதே நான்தான்'
என்று சிரித்தான் மௌஸ்
சற்றென்று பறந்து மௌஸை கவ்விய க்ரோ
- 'மன்னித்துவிடுங்கள் காட்...
உங்களின் எதிரியை வீழ்த்தி
நீங்கள் எனக்களித்த
எளிய உணவாக மௌஸை எடுத்துக் கொண்டேன்'
என்று சொல்லிவிட்டுப் பறக்க
கடவுள் பசியோடு இருந்தார்...
-மு. முகமது பாட்சா*
02/08/2019

கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டது
- 'க்ரோ.. நான் அழகாக இருக்கிறேன் இல்லையா!'
என்று வியந்தது
க்ரோ தலையைச் சாய்த்துப் பார்த்து
- ;ஆம் மன்னா!'- ' என்றது...
ப்ளாக்கன் என்ற அந்தக் கருப்பன் பூனை
மீசையைத் தடவிக் கொண்டான்...
நீ என்னைக் கடவுள் என்று கூட அழைக்கலாம்'
க்ரோ பணிவாகத் தலையையாட்டி
- 'அப்படியே காட்' என்றதும்
- 'நான் என்னை ஏன்
கடவுளென்று சொல்லிக் கொண்டேன் தெரியுமா?'
- 'சொல்லுங்கள் காட்'
- 'என் நிழல் கூட என் நிறம்தான்'
என்று சிரித்த போது
- 'என் நிழல் மட்டுமென்ன
சிகப்பாகவா தெரியும்?' என்று கேட்க நினைத்தாலும்
- 'ஆம் அதிசயம்தான் காட்' என்றது...
அப்போது அந்தப் பக்கம் நகர்ந்த மௌஸ்
சிரிக்க...
கடுப்பானான் கருப்பன்
- 'என்ன தைரியம்! என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்?'
- 'நான்தான் உன் கடவுள்
உன்னை ஓடஓட வேலை வாங்குவதே நான்தான்'
என்று சிரித்தான் மௌஸ்
சற்றென்று பறந்து மௌஸை கவ்விய க்ரோ
- 'மன்னித்துவிடுங்கள் காட்...
உங்களின் எதிரியை வீழ்த்தி
நீங்கள் எனக்களித்த
எளிய உணவாக மௌஸை எடுத்துக் கொண்டேன்'
என்று சொல்லிவிட்டுப் பறக்க
கடவுள் பசியோடு இருந்தார்...
-மு. முகமது பாட்சா*
02/08/2019
No comments:
Post a Comment