
தூக்கம் எத்தனை மோசமானது...
தூங்கும்போது
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
இறந்தவனை
தூங்குகிறான் என்று சொல்வது நியாயம்தான்
கனவில் வருகிறவனை
கண் மூடித் தூங்கும்போது புதைத்து விட்டு
வாசல் கதவைத் தட்டும்போது
அடைத்து விடுகிறீர்கள்...
காக்காய்க்குச் சோறு வைக்காதீர்கள்
விரட்டிவிட்ட வீட்டிற்கு
மானமுள்ள யாரும் வருவதில்லை.
- மு.முகமது பாட்சா*
12 /02 /2019
No comments:
Post a Comment