Saturday, 16 February 2019

நடுங்கும் கபர்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தக் கபர்களை 
விளையாட்டிற்கும் தோண்டிப் பார்க்காதீர்கள் 
அவை பெரும்பாலும் 
பச்சிளம் குழந்தைகளாகத்தான் இருக்கும்... 
அதனுள் எப்போதும் 
ஒரு நடுக்கம் 
நகர்ந்து கொண்டேயிருக்கிறது... 
அவை கிடையாகக் கிடத்தப்பட்டதல்ல 
கூளங்களாகப் பொதியப்பட்டது... 
அவற்றிற்கு 
தேசங்களின் எல்லைகள் தெரியாது... 
அதன் காதுகளில் 
அதானின் சப்தங்களை விட 
குண்டுகளின் முழக்கம்தான் நிறைந்திருக்கிறது... 
கேள்விகள் கேட்க யாரும் 
அவற்றை அனுமதித்ததில்லை... 
அவை நிம்மதியுடன் உறங்குவதாக 
கற்பனை செய்துகொள்வோம்... 
மதங்களைவிட மாபெரும் வன்மம் 
உலகத்தில் 
வேறெதுவும் கிடையவே கிடையாது. 

- முகமது பாட்சா*
16 /02 /2019

No comments:

Post a Comment

Popular Posts