
நடந்துபோவது
மிகவும் கஷ்டமாக இருக்கிறது
இப்போதுதான்
அந்தச் சாலையைப் போட்டிருந்தார்கள்
சரளைக்கல்லொன்று
தோள்பட்டையைப் பதம் பார்க்கிறது...
தோள்பட்டையென்றவுடன்
அவளின் நினைவு வராமல் இருந்தால் தவறு
அதிலவள் முகத்தை வைத்து உறங்குவாள்...
சூடான மூச்சுக்காற்றில்
என் சாபங்கள் விமோசனம் பெறும்...
அப்போதும்
அழுதுக்கொண்டே ஓடிவந்தாள்...
சராசரியாக நின்றிருந்த என்னைச்
சம்மட்டிகள் ஓங்கியடித்தன...
நான் அப்படியே நிற்க
அவள் தலைச் சுற்றி கீழே விழுகிறாள்
அவள் விழுந்தவிடம் புல் முளைத்திருக்கிறது
என் கால்களின் கீழ் தீயும் வாசனை
நான் அங்கிருந்து நகர்கிறேன்
நடந்துபோவது
மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
27 /02 /2019
No comments:
Post a Comment